ஏ-9 வீதியில் விபத்து! தடைப்பட்டிருந்த போக்குவரத்து!! (படங்கள்)

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் நள்ளிரவு விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தினால் ஏ-9 வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்ட நிலையில் அதிஷட்டவசமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த வான் வணக்கத்திற்காக முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

வானின் சாரதி ஆலயத்திற்கு சென்றிருந்த நிலையில், வாகனத்தில் சிலர் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஏ 9 வீதியில் பயணித்து பால கட்டுமான பணிக்காக கொங்கிறிற் தூண் ஏற்றி சென்ற கனரக வாகனம் மோதியுள்ளது.

சம்பவத்தில் வான் பலத்த சேதங்களிற்கு உள்ளான போதிலும் வானில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாகத் தப்பித்துக்கொண்டனர்.

சம்பவம் இடம்பெற்றதை அடுத்து குறித்த கனரக வாகனம் வீதிக்கு குறுக்கே நின்றமையால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous Post Next Post