யாழில் தனிமையிலிருந்த பெண்ணைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!


தனிமையில் வாழ்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை, சட்டத்துக்குப் புறம்பான வன்புணர்வு மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 30 வயதுடைய ஒருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி வீடு புகுந்த 30 வயதுடைய நபர், வீட்டில் தனிமையில் வாழ்ந்த 35 வயதுடைய பெண்ணை வன்புணர்ந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை, சட்டத்துக்குப் புறம்பான வன்புணர்வு, படுகாயமேற்படுத்தியமை மற்றும் அத்துமீறி வீடு புகுந்தமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சந்தேக நபர் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post