சாரதிகளுக்குப் புள்ளிகள் வழங்கும் திட்டம்! பூச்சியத்துக்கு வந்தால் அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்!!


மோட்டார் போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் செலுத்த இணைய முறையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்கு புள்ளியிடும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மோட்டார் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகோட இதனைத் தெரிவித்தார்.

வாகன சாரதிகள் தண்டப் பணம் விதிக்க எளிதான பண முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“வாகன சாரதி ஒருவருக்கு 22 புள்ளிகள் இருக்கும். ஒவ்வொரு குற்றத்திற்கும் புள்ளிகள் கழிக்கப்படும். சாரதி ஒருவர் பூஜ்ஜிய புள்ளிகளை எட்டும்போது, சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்படும்.

தேவையான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று சாரதி அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்” என்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகோட குறிப்பிட்டார்.
Previous Post Next Post