யாழில் அன்டிஜன் பரிசோதனை! கைதடி முதியோர் இல்லத்தில் 41 பேர் உட்பட 69 பேர் அடையாளம்!!


சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 41 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் முதியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இன்று 98 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 28 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 28 பேரையும் அவர்களது உடல்நிலையைக் கணித்து ஒரு பகுதியினர் வீடுகளில் பராமரிக்கவும் மற்றொரு பகுதியினர் கோவிட்-19 இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் கண்காணிக்கவும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் 48 முதியவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 41 பேருக்கு கோவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் அனைவரையும் வட்டுக்கோட்டை மற்றும் கோப்பாய் இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post