யாழில் கட்டட ஒப்பந்தகாரினால் வேலைக்கு அமர்த்திய சிறுவன்! மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!


யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணைப் பகுதியில் புதிய கட்டடம் ஒன்றில் மின்னிணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த கோபு விஜித் (வயது-17) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த சிறுவன் தனியார் கட்டட ஒப்பந்தகாரர் ஒருவரின் கீழ் வேலைக்கு சேர்ந்தார். புதிய கட்டடத்தில் மின் இணைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனை வேலைக்கு அமர்த்தியது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சிறுவனின் பெற்றோரிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
Previous Post Next Post