காரைநகர் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மாயமான இந்திய மீனவரின் சடலம் மீட்பு!


படகு மூழ்கியதில் காணாமற்போன இந்திய மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இந்தியா – கோட்டைபட்டினத்தல் இருந்து புறப்பட்ட படகு எல்லை தாண்டி காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது, இலங்கை கடற்படையின் ரோந்து படகில் மோதியதில் நடுக்கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் காணாமற்போனார்.

படகு ஓட்டுநர் ராஜ்கிரனை இலங்கை கடற்படை தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று காலை காரைநகர் கடற்பரப்பில் மீட்பு குழுவினரால் சடலம் மீட்கப்பட்டது.

உடல் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
Previous Post Next Post