மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய டிப்பர்! (படங்கள்)

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த இருவரே குறித்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post