நெடுந்தீவில் இறந்த நிலையில் கரையொதுங்கிய மீன்கள்! இந்திய மீனவர்கள் காரணமென குற்றச்சாட்டு!!


யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களது இழுவைப்படகுகளில் பிடிக்கப்பட்ட மீன்களே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் குரூஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த புதன் கிழமை வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவை மடி பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினரை கண்டு தப்பியோடியதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு இலங்கை கடற்படையை கண்டு ஓடிய போது மடியை வெட்டிவிட்டு சென்ற காரணத்தினால் தான் இவ்வளவு பெருந்தொகையான மீனகள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post