Update: யாழில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென ரயில் முன் பாய்ந்து உயிர்மாய்ப்பு! (வீடியோ)

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் தொடருந்தில் பாய்ந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்தில் பாய்ந்த அவர் உயிரை மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

இச் சம்பவத்தில் கனகரட்னம் வீதி, அரியாலையை சேர்ந்த பரமேஸ்வரன் லக்சன் (வயது-25) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அதனை வீதியில் நிறுத்திவிட்டு தொடருந்துப் பாதையில் பாய்ந்தார் என அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.

Previous Post Next Post