குடைக்குள் வாளை மறைத்து எடுத்து வந்து இளைஞன் மீது தாக்குதல்! -யாழில் சம்பவம் (படங்கள்)

யாழ்.அரியாலை - தபால்கட்டை சந்தியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் வீதியில் நின்றிருந்த நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடைக்குள் வாள் ஒன்றை மறைத்து எடுத்துவந்து, தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous Post Next Post