அழகான முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப்போன சீதனம்!

வாழ்வைச் சீரழித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரக்கர்களாகி விட்ட ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தற்காலத்தில் எவரும் ஏற்பதாகவில்லை.

அதுவும் படித்த சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் தொடர்பில் நாம் பெரிதும் அலட்டிக் கொள்வதும் இல்லை.

ஒரு கோடி ரூபா சீதனமாகக் கொடுத்த வீட்டில் ஒரு நேரமும் உறங்க முடியாமல், ஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாமல் பட்ட துயரங்களின் இறுதி முடிவுதான் தற்கொலையாகியது.

வைத்தியரைத் திருமணம் செய்த போதும், மன வைத்தியத்திற்கு மருந்தில்லாமல், நிம்மதியில்லாமல் நோயாளியாகி தற்கொலை செய்யும் பாவப்பட்ட நிலை இனி எந்தப் பெண்ணுக்கும் வேண்டாம்.

அழகான இந்த முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப் போன சீதனம்.

ஆணாதிக்கத்தின் உச்சம் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்தது என்றால் ஒட்டுமொத்த ஆணினமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது.


Previous Post Next Post