யாழில் நள்ளிரவு வீடு புகுந்து வாளால் வெட்டிக் கொள்ளை! மூவர் சிக்கினர்!! (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத் தலைவரை வாள் மற்றும் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு 6 பவுண் தாலிக்கொடியை கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் செபஸ்தியான் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது;

வீடு புகுந்த கும்பல் வாள் மற்றும் கத்தியால் குடும்பத்தலைவரை வெட்டி படுகாயப்படுத்திவிட்டு 6 தங்கப் பவுண் தாலிக்கொடியை கொள்ளையிட்டுத் தப்பித்தது.

கோப்பாய் வைத்தியசாலையில் கடமையாற்றுபவரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கொள்ளைக் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தடயங்களின் அடிப்படையில் கோண்டாவிலைச் சேர்ந்த மூவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். 40,30 மற்றும் 23 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர்.

பிரதான சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள், கோள்ளையிடப்பட்ட தாலிக்கொடி, வாள் மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் – என்றனர்.
Previous Post Next Post