மகளுடன் சண்டை! மருமகனை அடித்துக் கொலை செய்த மாமா!! -கிளிநொச்சியில் சம்பவம்


கிளிநொச்சியில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை கணவன், மனைவிக்கிடையில் குடும்ப மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது அங்கு வந்த மனைவியின் தந்தை, சம்பவத்தில் தலையிட்டுள்ளார்.

இதனால் மாமன் மருமகனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன்போது மாமனார் மருமகனத் தாக்கியதில் படுகாயமடைந்த மருமகன் தருமபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினமே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் பெருமாள் ரவிச்சந்திரன் வயது 36 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post