திருமணம் செய்ய மறுத்த இளம் பெண் சுட்டுக் கொலை! நெடுங்கேணியில் கொடூரம்!! (படங்கள்)

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (15) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வவுனியா - நெடுங்கேணி - சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் பாலசுந்தரம் சத்தியகலா (வயது-31) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

விவசாய தேவைக்காக பசளை வாங்க தாயாருடன் சென்ற நிலையில் உணவருந்திவிட்டு செல்ல முடிவெடுத்து மீண்டும் வீடு நோக்கி செல்கையில் வீதியில் நீர் நிறைந்திருந்தமையால் தாயாரை வீதியில் இறக்கிவிட்டு நீர் நிறைந்திருந்த இடத்தை கடந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டே மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்ததனால் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்த பெண்ணின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் ஏற்கனவே கொலை குற்றத்துக்காக சிறையில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை தன்னை திருமணம் செய்யுமாறு யுவதியை வற்புறுத்தி வந்த நிலையில், யுவதி பொலிஸ் முறைப்பாடு செய்தமையால் கோபமடைந்து சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post