நல்லூர் பிரதேச சபை ஊழியர்களால் பாடசாலைகள் தூய்மைப்படுத்தல்! (படங்கள்)

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று பாடசாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரி, கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலை மற்றும் திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளும் அதன் புறச்சூழலும் இவ்வாறு துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலைகளின் அதிபர்களினால் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெ.கிரிதரனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இத் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post