வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுடன் வந்த குழுவினருக்கும் பிறிதொரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலால் வவுனியா வைரவபுளியங்குளம் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதி கலவரபூமியாக காட்சியளித்தது.
வவுனியா வைரபுளியங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களாக இளைஞர் குளுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக அடிதடி சம்பவங்கள் இடம்பெற்றுவந்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை குறித்த பகுதியில் அதிகளவான இளைஞர்கள் குழுமியிருந்தனர். இதனையடுத்து அந்தப்பகுதிக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தனது சகாக்களுடன் சென்றிருந்தார். இதன்போது இளைஞர்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டதுடன், தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.
இதேவேளை சற்றுநேரத்தில் குறித்த பகுதிக்கு வந்திறங்கிய மற்றொரு குழுவினர் பாராளுமன்ற உறுப்பினருடன் வருகைதந்திருந்த சகாக்களை தாக்கத்தொடங்கினர், அவர்களும் திரும்பித்தாக்கினர்.
இதனால் இருதப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினரையும் தாக்க முற்ப்பட்டனர்.குறித்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் சற்றுநேரம் பதட்டநிலை ஏற்ப்பட்டது.
சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் ஏறி தனது அலுவலகம் நோக்கிச்சென்றார். எனினும் அவரது சகாக்களை துரத்திச்சென்ற குழுவொன்று மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் அலுவலகத்திற்குள் உட்புகுந்து தாக்க முற்ப்பட்டது.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மோதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgwp8mPkF7C-BH79_MFO3yBOZLB1ykwFgT45g-q8r5jPp8-mIIfYHmaj0NvsckathMYxNdymSqi5pMtLXGHIMNidU2H1-qFpcJ-czuQHvxSBxfHYZVE6FRJ-s6NlNbRlf0XJ_vaeK8pt24W9Y6Llk44F2cubOSnFSUGqXj7PB3182dXcBpH_S3hRqa-=s16000)
![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj73-ruFgtL_ussTUtwlREDI3DCJa4HEFKnfOnF-LDrbv48-c0ADLHfvNTghr4gPWfMwph3OBLWxa35NM0xmRtFO4PEB9DMJkO4VT47cDhfMY5a0htK21rmppDEvhy3_3iNfr6iHXuTRHgDvU2IfjwG4Q3p4wc6VxJMhlA-5kkXFn4eoSMtQKMTgJkA=s16000)
![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgllMdkrfHLr5qIQzvg2LQTXLTIzT92XAXsO-HWsYhCpkX2gptpB9dbBIoTcB9I6l1_fgFASmVX5vA7BHeapil6P2qcjRY1WxrNg5W1gRnUAsmghm4G5aAHceZ1FcdHtkiMoiCU_-gzozMfDbilyzSNOWVpVyNyq4J1-aqWEhkvYbF9xrn6RdO_EGGQ=s16000)
![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgObUp5-CKXhDnPifP8Uk5q7oWZnPA_s6w_DB-AlVDD-6VzhCo5BoL92d31lB_7BWOrBHKLvktXy3cfbRs-hll_uoCQiAjGaZkTWUJ20fyVqVCPJVd44BALVWyZwsvQRjSfkYPf2sZR0adRMg5GlLpqmAy-KtUBqjNznd7z-XQEkTf5xOAbdJOA4k2g=s16000)
![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgXQDb0MReqv1-4VWjwds-hYnPLt9PpXABUU_I25JIajk9E2bg1KrcZRAFWaMZ0sxIRR5L7zj5vYLi7WazW9nv4JygpBeMGxzub_CZhwjxQaFTqTlZewVa5k8-xOE0BP2mWELMStpVzcG6BWgzpYlZhVJ05JqwTD8QWHx3AR_6dj02eaSHckWQTV3ni=s16000)
![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhsnYqr4gVgnLXl4x_r6TrC6A0satArsrOj8ZUe15Y6vsJZNs9cWnXnBl4GaBYKksH6x4TRAyK1DYPrw4wYJnbNhFPozq-e7DkXbcRTKn6hUPvwTB_jjQivc9_wv2iwvuwNH1QileAHbgHh-7mwoKiviu-P5SlbKRf29J2FqgaAlWGELpHLYh7pQVXY=s16000)
![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi3TiqXPQeEYejP3l2v52Tb54EC57DKsHjAv8vWqqA9rWoQKJc7jkZCHkCDV1VDVfZ8jPuSJpD1UtKSSVBa6-ujwSliE5GXZeoIL2fkacT8sYBh-C4npo4npfV3M3ulRc4bLZ1iKV9I0SPGU-IBoZXbZHrFSeCzjp83p0CCXK1dMi7hJqj2bDGH25LQ=s16000)
![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj7OQk3pn7KW-3gooEkwEzUy-zTvs8L5Wi0UIBEBMnC4hFKBAb7fgO7LuSMqSDPtKPYy-MC7GLlyfKujkiguLJi2_Sm8R18x-8COvu5vyLqWbAaAMjVA31GnejaCUVIP4VL0U9iZcgKSpRFwNBSQQ76ZW_5-9JiGHlXY5GwCSeyhrmMXYfqrc3F_8tc=s16000)
வவுனியா வைரபுளியங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களாக இளைஞர் குளுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக அடிதடி சம்பவங்கள் இடம்பெற்றுவந்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை குறித்த பகுதியில் அதிகளவான இளைஞர்கள் குழுமியிருந்தனர். இதனையடுத்து அந்தப்பகுதிக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தனது சகாக்களுடன் சென்றிருந்தார். இதன்போது இளைஞர்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டதுடன், தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.
இதேவேளை சற்றுநேரத்தில் குறித்த பகுதிக்கு வந்திறங்கிய மற்றொரு குழுவினர் பாராளுமன்ற உறுப்பினருடன் வருகைதந்திருந்த சகாக்களை தாக்கத்தொடங்கினர், அவர்களும் திரும்பித்தாக்கினர்.
இதனால் இருதப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினரையும் தாக்க முற்ப்பட்டனர்.குறித்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் சற்றுநேரம் பதட்டநிலை ஏற்ப்பட்டது.
சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் ஏறி தனது அலுவலகம் நோக்கிச்சென்றார். எனினும் அவரது சகாக்களை துரத்திச்சென்ற குழுவொன்று மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் அலுவலகத்திற்குள் உட்புகுந்து தாக்க முற்ப்பட்டது.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மோதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.