சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் தனது வீட்டில் இருந்து நேற்று விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார்.
இந்த நிலையிலே அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன், சடலத்திற்கு அருகிலிருந்து அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவ இடத்துக்குச் சென்ற அடம்பன் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.