இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
புகையிரதம் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில், அறியாமையால் பயணிக்க முற்பட்ட வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது – 46) என்பவரே உயிரிழந்தார்.
காங்கேசன்துறையில் இருந்து , கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடனேயே இந்த விபத்து இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.