யாழில் பாடசாலைச் சீருடையுடன் பொலிஸாரிடம் தஞ்சமடைந்த சிறுமி! (படங்கள்)

பெற்றோர் தன்னை சித்திரவதை செய்வதாக கூறி 12 வயதான சிறுமி ஒருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

யாழ்.ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினம்தோறும் சண்டை பிடிப்பதாகவும் இதனால் தன்னுடன் ஒவ்வொருநாளும் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்த சிறுமி, இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய குறித்த சிறுமி நீண்ட நாட்களாக தந்தையின் சித்திரவதையைப் பொறுக்கமுடியாது இன்றையதினம் தஞ்சம் அடைந்ததாக குறிப்பிட்டார்.

தஞ்சமடைந்த குறித்த சிறுமி கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் அச்சுவேலிப் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் இவரை விட இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் முறைப்பாட்டின்போது சிறுமி தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post