யாழில் லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து! 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!! லொறி மீது மக்கள் தாக்குதல்!!! (வீடியோ)

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 9 மணியளவில் யாழ்ப்பாணம் சத்திரச்சந்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

ஊர்காவற்றுறை தம்பாட்டியைச் சேர்ந்த அஜந்தன் அபிநயன் (வயது-10) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

தனியார் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான லொறி, முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

பேத்தியாருடன் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையிலிருந்து பயணித்த சிறுவன் வீதியில் சரிந்து விழ அவரது தலையில்லொறிச் சில்லு ஏறியுள்ளது. அதனால் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் லொறி மீது தாக்குதலை நடத்தினர். எனினும் லொறியை மீட்ட பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post