அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி துறப்பு!


பிரதமர் தவிர்ந்த அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகல் அறிவிப்பை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இன்றிரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அமைச்சர்கள் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அமைச்சர்களான நாமல் ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோர் தமது பதவி விலகலை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையினால் இந்த தீர்மானத்தை ஆளும் தரப்பினர் எடுத்துள்ளனர்.
Previous Post Next Post