பிறந்த சிசுவுடன் போராட்டத்தில் இணைந்த பெற்றோர்! வைரலாகும் புகைப்படம்!!

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இவ்வளவு நாட்கள் பொறுமை காத்து வந்த இலங்கை மக்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

தற்போதைய வரையில் கிடைத்துள்ள தகவல்களின் படி அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் வீதிக்கு தயக்கமின்றி இறங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது புகைப்படமொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி புதிதாக பிறந்துள்ள சிசுவுடன் பெற்றோர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள விடயம் இலங்கையின் நிலை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை காட்டுகிறது என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


Previous Post Next Post