அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தின் அறிவிப்பு!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எந்த முடிவும் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (27) அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஊடகங்களில் வெளியாக செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

எதிர்வரும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சு தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post