யாழில் இளம் பெண்ணை மிரட்டிப் பணம் பறித்த முச்சக்கரவண்டிச் சாரதி! நன்கு கவனித்த சக சாரதிகள்!! (படங்கள்)

யாழ். நகருக்கு சேவைத் தரிப்பிட அனுமதி அற்ற, வீதியால் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி பயணம் செய்த இளம் பெண்ணிடம் ஒரு கிலோமீற்றருக்கும் குறைவான தூரத்திற்கு சுமார் 2 ஆயிரம் ரூபாய் கூலி தருமாறு குறித்த முச்சக்கர வண்டிச் சாரதி மிரட்டியுள்ளார்.

இதனை அறிந்த வைரவர் கோயில் சேவை தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள், குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியை நன்கு கவனித்து, பாதிக்கப்பட்ட மெண்ணுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் வைரவர் கோயிலடி அருகாமையில் இன்று முற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்துக்கு அருகாமையிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு செல்ல குறித்த இளம் பெண் வீதியால் சென்ற ஒரு முச்சக்கர வண்டியை மறித்து ஏறியுள்ளார்.

தரிப்பிட சேவை அனுமதி பெறாத ஒரு முச்சக்கரவண்டியில் ஏறிய பெண் தான் செல்லவுள்ள இடத்தை கூறி எவ்வளவு பணம் என்று கோரியபோது, பார்த்து எடுக்கலாம் என கூறி சாரதி அப்பெண்னை கூட்டிச் சென்றுள்ளார்.

யாழ். நகரை அடைந்ததும் கூலியாக 2000 ரூபா பணத்தை தரும்படி கோரியுள்ளார். ஆனால் குறித்த பெண் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் ஏன் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இடத்துக்கு இவ்வளவு கூலி என்றும் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்காத முச்சக்கரவண்டி சாரதி  2000 ரூபா பணத்தை கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.

சாரதியின் மிரட்டலால் அச்சமுற்ற குறித்த இளம் பெண், தன்னிடம் 1500 ரூபாதான் இருப்பதாக கூறி கொடுத்துள்ளார்.

இதன்பின்னர் அந்த இளம் பெண் யாழ். வைரவர் கோயிலடியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அழுதவாறு சென்று குறித்த சம்பவத்தை கூறு குறித்த தூரத்துக்கு எவ்வளவு கூலி என்று கேட்டுள்ளார்.

இளம் பெண் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதை புரிந்துகொண்ட வைரவர் கோயில் முச்சக்கரவண்டி தரிப்பிட சாரதிகள் துரிதமாக செயற்பட்டு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியை தேடி கண்டுபிடித்து சாரதியிடம் விளக்கம் கோரியிருந்தனர்.

ஆனாலும் சம்பவத்தை ஏற்றுக்கொள்ளாத குறித்த முச்சக்கரவண்டி சாரதி நன்கு கவனிகப்பட்ட நிலையில் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஏமாற்றி கூலியாக பறிக்கப்பட்ட பணத்தை வைரவர் கோயிலடி முச்சக்கரவண்டி சாரதிகள் குறித்த பெண்ணிடம் மீள பெற்றுக்கொடுத்ததுடன் இனி இவ்வாறான மோசடிகளில் ஈடுபடக்கூடாது எனக் கூறி சாரதியை எச்சரித்து அனுப்பி வைத்திருந்ததுடன் இவ்வாறான் தரிப்பிட அனுமதி அற்ற சேவைகளை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post