
குறித்த சம்பவம் யாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் சன நெரிசலில் இளைஞன் தனக்கு முன்னால் நின்ற யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
காயத்திற்கு உள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்து பிளேட்டினால் வெட்டிய இளைஞனை பேருந்தினுள் மடக்கி பிடித்தனர். மடக்கிப்பிடித்த இளைஞனை யாழ்.எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் ஒப்படைத்தனர்.