பிரான்ஸில் கிறிஸ்மஸ்க்கு முன்னதாக கொரோனா அலை - 9! பிரதமர் அபாய அறிவிப்பு!

பிரான்ஸில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளதாக பிரதமர்  Élisabeth Borne தெரிவித்துள்ளார்.

அத்துடன் 9 ஆவது கொரோனாத் தொற்று அலை ஏற்படலாம் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். 

எனவே பொது மக்கள் பொதுப் போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும் போது முகக் கவசங்களை அணிய வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரான்ஸில் கொரோனாத் தொற்று நீங்கி விடவில்லை. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போது 10 வீதம் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

அதேநேரம் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்ற தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 வீதம் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் கிறிஸ்மஸ்க்கு முன்னதாக கொரோனாத் தொற்றின் 9 ஆவது அலை ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (29.11.2022)

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 29, 2022 செவ்வாய்க்கிழமை.
  • 88 பேர் மரணம்
  • 91,814 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 1,076 (+11) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
Previous Post Next Post