ஐரோப்பாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் பணத்தை தடுக்கும் கும்பல்!

இலங்கையர்களுக்குச் சொந்தமான வெளிநாட்டுப் பணத்தை நாட்டில் உள்ள வங்கிகளுக்கு செல்ல விடாமல் அந்தந்த நாடுகளில் வைத்திருக்கும் வகையில் கும்பல்கள் செயற்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

15 நாடுகளில் செயற்படும் சுமார் 200 கறுப்புப் பண கடத்தல் கும்பல் இதற்கு பின்னால் இயங்குவதாக தெரியவந்துள்ளது.

இந்த கும்பல் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நோர்வே, ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள இலங்கையர்கள் வடக்கிற்கு தமது வெளிநாட்டுப் பணப் புழக்கத்தைத் தடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வடக்கில் புழக்கத்திற்கு வர வேண்டிய சுவிஸ் பிரான்ங், ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் க்ரோன் ஆகிய பணத்தை உண்டியல் மோசடியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நோர்வேயின் ஒஸ்லோவில் வசிக்கும் இலங்கையர் ஒருவரே இந்த இரகசிய தகவலை வெளியிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து பெருமளவிலான சுவிஸ் பிராங்குகள் யாழ்ப்பாணத்திற்கு வந்தன, ஆனால் உண்டியல் கடத்தல் காரணமாக வடக்கில் சுவிஸ் பிராங்குகளின் இருப்பு குறைந்துள்ளதென தெரியவந்துள்ளது.
Previous Post Next Post