Update: யாழில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை! (படங்கள்)

இரண்டாம் இணைப்பு:

யாழ்ப்பாணம் - புங்கங்குளம் புகையிரதக் கடவையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலில் குறித்த இளைஞன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் புங்கங்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் 2.15மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் அதே ரயிலில் மீள திரும்பி யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

அங்கிருந்து நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் பாண்டியன் தாழ்வு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வெற்றிவேல் டினோயன் என தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முதலாம் இணைப்பு: 

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த இளைஞனை அதே ரயில் ஏற்றிவந்து யாழ்.புகைரத நிலையத்தில் இறக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின் ரயில் மீண்டும் பயணமானது.

இந்த சம்பவம் புங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் 2.15 மணியளவில் இடம்பெற்றது.
Previous Post Next Post