![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpVmx1t3s5UQJavMGnd2WTw7qIEsEhd-ZEnBXqrM69RbTXkFChDZFLqfuxl8aHsPpzrJ7REnxboAlqaXo-neE51g4bRWaQEe0mPIaZZrkKXkn-GSgX_d8Q2XpkIaxleNWurHMrQjHp5nTGRTh2JTT8QHo_b7BLUqFrz5zuaDrfIAsOT7-PNKWa3jIW/s16000/00.jpg)
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த 25 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த 25 பேரும் ஜேர்மனி அரசைக் கவிழ்க்க அழைப்பு விடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஜேர்மனியில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
பெடரல் அதிகாரிகள் ஜேர்மனியில் உள்ள மாகாணங்களில், 11 மாகாணங்களில் சோதனைகள் நடத்தியிருந்தனர்.
ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக பெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பை ஏற்காத Reich Citizens movement என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து பெடரல் அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.