பிரான்ஸ்-பாரிஸில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்! Saint-Denis நகரிலும் தாக்குதல் நடத்தத் திட்டம்!!

தலைநகர் பரிசில் மூவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொலையாளி, முன்னதாக Saint-Denis நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள குர்திஷ் இன மக்களில் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை மேற்கொண்ட 69 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நபர் பின்னர் உடல் சுகயீனம் காரணமாக விடுவிக்கப்பட்டு, மனநல சிகிச்சைகளுக்கான அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவருக்கு உள்நல குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு haine des étrangers pathologique’ என சொல்லப்படுகிற வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசில் தாக்குதல் நடத்திய நபர், முன்னதாக 93 ஆம் மாவட்டத்தின் Saint-Denis நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
Previous Post Next Post