யாழ்.கோண்டாவிலில் வன்முறை கும்பல் வீடு புகுந்து அட்டகாசம்! (படங்கள்)

யாழ்.கோண்டாவில் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த இருவர் மீது 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த குழு வீடு மற்றும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post