![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9-kC4yOnZQ35RpBeqjDD7t-v4sjVM-KmXl7WUinOjv67rXNCcSWZj6Gg_pg4bzIk_QEuvA7_8tOzep06gfbfD5s8QBOXTfdnKbA_prfVQo6zlbDJkuSCr_8EF8hZ96ts6zces4EFQI73-anMNPGd_FWcn1_yENB0f9Y7cUoZ-14rDZX6s3OPi3xVU/s16000/00.jpg)
கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் கூறினர்.
கோப்பாய் இராசபாதையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
முகமூடியணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குடும்பத் தலைவரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றனர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9-kC4yOnZQ35RpBeqjDD7t-v4sjVM-KmXl7WUinOjv67rXNCcSWZj6Gg_pg4bzIk_QEuvA7_8tOzep06gfbfD5s8QBOXTfdnKbA_prfVQo6zlbDJkuSCr_8EF8hZ96ts6zces4EFQI73-anMNPGd_FWcn1_yENB0f9Y7cUoZ-14rDZX6s3OPi3xVU/s16000/00.jpg)