![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgH3ZUoCrxy-QT5QkrVsq3IhrtC9QJ-7wk8l9bXupzP1CApgmGABaTwxN4DUPdWUBX24KWc4B3zKWdCVZvG3YbTjnBwp4GuBpjJmcAKKdOr_eH6485Q6CD0iu3FQbLVJK_r_4jKObe9QANJ0KbSc8toM-c-B4ZBaAt9-61XPP5ftqEeXw3jJKD1y3KM/s16000/_127060972_tv079435858.jpg)
கிட்டத்தட்ட 7 சதவீதமான நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் இல்லை என பிரெஞ்சு பெற்றோலிய நிறுவனங்களுக்கான ஒன்றியம் (l’Union française des industries Pétrolières -Ufip) நேற்று புதன்கிழமை மாலை அறிவித்துள்ளது.
சுத்திகரிப்பு ஆலைகளின் (les raffineries) ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் இடம்பெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தில் TotalEnergies மற்றும் Esso-ExxonMobil ஆகிய பெற்றோலிய நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் எரிபொருட்களின் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.