
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் மீது டிப்பர் வாகனம் மோதி குறித்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சுப்பையா இரத்தினசிங்கம் வயது 63 என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

