யாழில் வீடொன்றில் திடீர் தீ விபத்து! தீயை அணைக்கக் காசு கேட்ட மாநகர சபை!! (படங்கள்)

யாழ்.சுண்டுக்குளி - விதான்ஸ் லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் அதற்கான பணத்தை முதலில் கோரியுள்ளனர்.

பின்னர் இந்த விவகாரத்தில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் தலையிட்டு பின்னர் தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டபோதும், வீட்டின் ஒரு பகுதி தீயினால் எரிந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக யாழ்.மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

இன்று காலை தீ விபத்து ஏற்பட்டபோது அது குறித்து யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு நேராக சென்றும், தொலைபேசி மூலமும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கான பணத்தினை கட்டுவதாக உத்தரவாதம் தாருங்கள் என கேட்க்கப்பட்டுள்ளது.

ஆனால் அப்படி பணம் அறவிடுவதற்கான எந்தவொரு நடைமுறையும் இல்லை. மாநகரசபை ஆணையாளரும் அவ்வாறான பணிப்பை வழங்கவில்லை என குறிப்பிட்டார்.

இதேவேளை மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post