![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKt1wVu2UuvhYykS2foNJXSw8M0WcEgLH2QrrhwLrGnSBzHqMevFBZ2oPkoJWtOYTc82jKvPEPL8E88mdyfiRvvJpLtH7lAXfhHybBaFQ94bXsi0skVPFHcFLZYgJGi839k7Z0jQ9OI-F9x5AMXXoU4ua96CIGTPKG43tnmn5EAHtceFZWlont0Mll/s16000/1683035383-dialog-airtel-2.jpg)
Bharti Airtel Lanka (Pvt) இலங்கையில் தனது செயற்பாடுகளை Dialog Axiata PLC உடன் இணைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் Dialog Axiata PLC பணிப்பாளர்/குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்தார்.
இரு தரப்பினரும் உரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
முன்மொழியப்பட்ட பரிவர்த்தனை சில ஒப்பந்தங்கள், பொருத்தமான ஒழுங்குமுறை மற்றும் பங்குதாரர்களின் ஒப்புதல்கள் உட்பட தேவையான இறுதி நிபந்தனைகள் கையெழுத்திடப்படுவதற்காக உள்ளன என்று அவர் கொழும்பு பங்குச் சந்தைக்கு மேலும் தெரிவித்தார்.
செயற்பாடுகளில் ஏதேனும் முன்னேற்றங்கள் இருந்தால் இரு தரப்பினரும் மேலும் அறிவிப்புகளை உரிய நேரத்தில் வெளியிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7ea8S6XJypsVYgE0hF9YV3vZQzRwfCF7bwizZD9GKmpR6sKmzCunnbwvKwbzK5Ecyza6C1fYmsi6Nuvi9O_93hy9YXq6RVGFukyuAMK5FxAgfc27jvbFh9NugvdkahX99SNh4js8dxKiWnI8SMzVzB4V5ZvRERpe5lfS34TwCzJUYzEpolu7hdU0C/s16000/IMG-20230502-WA0002.jpg)