வட்டக்கச்சி வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வட்டக்கச்சி, மாவனூர் பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வட்டக்கச்சி மாவடிப் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post