தாயைத் தாக்கி விட்டு மகன் தற்கொலை!

தாயைத் தாக்கி விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று புதுக்குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கணேசன் கேதீஸ்வரன் (வயது-33) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

10 வருடங்களுக்கு முன்னர் மனைவியைப் பிரிந்து, தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். சகோதரி தொழில் நிமிர்த்தம் கொழும்பில் தங்கியுள்ளார்.

இந் நிலையில் நேற்று தாயாருடன் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தாயைத் தாக்கியுள்ளார். இதனால் தாயார் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

கொழும்பிலிருந்து மகள் இன்று அதிகாலை விடுமுறையில் வந்து இருவரும் வீட்டிற்குச் சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் காணப்பட்டது.

இது தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post