![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguZOAOkm42rr8jz9BUyTAwLKF1Y5OotPmigPMGiF9TTMIZWMCZiMruuwXpY9H0TO1O-zVQ3PMChXoB_vZhz4cLu_laakAvYhO_IXtT_fAASrtDkwqCXIOc0kkO5ubXlRO1AjV5ePVK-sc/s1600/00.jpg)
யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(08) இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இவ்வாறு காயமடைந்தார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.