
மயிலங்காடு, எழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த சுவாம்பிள்ளை வவி (வயது- 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து குறித்த நபர் வெளியில் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரண்டு தினங்களாக அவரை காணாத நிலையில் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் அவரது சடலம் நேற்றையதினம் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மது போதையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
