17 வயதில் திருமணம்! இரண்டு மாதத்தில் தற்கொலை!! யாழில் இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்!!!

வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களான இளம் பெண் விபரீத முடிவால் மரணமடைந்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கரவெட்டி நெல்லியடி பகுதியில் ரூபன் கிருஷ்ணசாந்தி (வயது-17)  யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருமணம் செய்து இரண்டு மாதங்களாக கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு இருந்த நிலையில் இந்த விபரீதமான முடிவு எடுத்து உயிர் இழந்துள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரனைகள் இடம்பெற்று, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Previous Post Next Post