வேலணையில் வளர்ப்பு நாய்களுக்கு நோய்த் தடுப்பூசி! (படங்கள்)

வேலணை பிரதேச சபை மற்றும் வேலணை சுகாதார துறையினர் இணைந்து வேலணைப் பகுதியில் உள்ள வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.

அத்துடன் எதிர்காலத்தில் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளான மண்டைதீவு, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு, நயினாதீவுப் பகுதிகளிலும் உள்ள வளர்ப்பு நாய்களுக்கு குறித்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் அதிக வெப்ப நிலை காரணமாக நாய்களுக்கு நோய் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள நிலையிலேயே இந்த விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post