கனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ்ப் பெண்! பொலிஸார் அவசர கோரிக்கை!!

கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ்ப் பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சசிகுமாரி கடைசியாக கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு ழுயம Oak St + Parliament St பகுதியில் காணப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

காணாமல் போன அன்று சசிகுமாரிBlue short sleeve pajama சட்டை மற்றும், பிங்க் pajama பேண்ட் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட சசிகுமாரி குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post