
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசாவுக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்படவேண்டும் என்று கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளை கோரியிருந்ததுடன், அவரது நியமனத்தை எதிர்பார்த்துமிருந்தது.
தமிழ் அரசுக் கட்சிக்கு இம்முறை ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது. அதற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கடந்த இரண்டு நாள்கள் பேச்சுக்கள் இடம்பெற்றன.
இந்த நிலையில் அம்பாறை மாவட்டம் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள நிலையில் அந்த மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

