இலங்கையில் அதிகரித்த கொரோனா உயிரிழப்புக்கள்! ஒரே நாளில் 9 பேர் சாவு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று சனிக்கிழமை (நவ.21) இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒரே நாளில் அதிகளவு கோவிட்-19 உயிரிழப்புகள் நேற்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 6 வாரங்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 19 ஆயிரத்து 767 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 590 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post