முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூன்று விவசாயிகள் உயிரிழப்பு! (படங்கள்)


முல்லைத்தீவு குமுலமுனை மூன்றாம் கண்டம் பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

குமுலமுனை மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குமுழமுனை பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை மயூரன் (வயது-33) , சுஜிபன் மற்றும் கணுக்கேணி மேற்கைச் சேர்ந்த ஜெகநாதன் யுகந்தன் (வயது-32) ஆகிய மூவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரவாகியும் மூவரும் வீடு திரும்பாத நிலையில் , அவர்களது உறவினர்கள் அவர்களை தேடி சென்ற போது வயலில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உறவினர்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.
Previous Post Next Post