முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: கர்ப்பத்துக்குக் காரணமான அத்தான் கைது!! நீதி கேட்டுப் பேரணி!!! (படங்கள்)

புதுக்குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு இன்று கவயீர்ப்புப் பேரணியை முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு சிவில் சமூக அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தின் இடைநடுவே வீதியில் பயணித்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி வழங்கிய உறுதிமொழிகளையடுத்து பேரணி முடிவுக்கு வந்தது.

புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த யோகராசா நிதர்ஷனா (வயது-12) என்ற சிறுமி 3 நாள்களாக காணாமற்போன நிலையில் வீட்டுக்கு அண்மையாகவுள்ள பற்றைக் காணிக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனையில் தெரியவந்தது.

இந் நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு, அவரது மூத்த சகோதரியின் கணவரான 34 வயதான அத்தானே காரணமென்பது விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியின் மூத்த சகோதரியான 20 வயதான பெண், கடந்த மாதமளவிலேயே குழந்தை பிரசவித்திருந்தார்.

அவரது கணவனான 34 வயதானவர் ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். அந்த குடும்பத்தை பிரிந்து, உயிரிழந்த சிறுமியின் சகோதரியை திருமணம் முடித்துள்ளார்.

கொரோனா காரணமாக பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுமி வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில், அத்தானினால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, கர்ப்பமாக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தார்.

சந்தேக நபரை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதியளித்தது.

அத்துடன், சிறுமியின் வீட்டை தடயவியல் பொலிஸாரின் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி காலை 7 மணிக்கு காணாமற்போனார் என்று தாயார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி:








Previous Post Next Post