Update: கிளிநொச்சியில் எறிகணை வெடித்ததில் இளைஞன் பலி! சகோதரன் படுகாயம்!! (படங்கள்)

எறிகணையொன்றை பரிசோதித்தபோது அது வெடித்துச் சிதறியதில் 25 வயதான இளைஞன் உடல் சிதறி பலியானதுடன், 13 வயதான சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05.12.2021 ) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எறிகணையொன்றை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது அது வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளதுடன் சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்துள்ளான்.

சம்பவத்தில் சிவலிங்கம் யுவராஜ் (வயது- 25) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், சிவலிங்கம் நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 




Previous Post Next Post