ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது!

மேல் மாகாணத்தில் ஏழு பொலிஸ் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவுகளில் நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைபடுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணி முதல் தளர்த்தப்படும் என பொலிஸ் தலைமையகம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Previous Post Next Post