நெருப்பில் சூடு வைத்து தொடையில் பெயர் பொறித்த கிளிநொச்சிப் பாடசாலை மாணவிகள்!

பாடாலை மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆங்கில எழுத்துக்களால் பெயர்களை பொறித்த நிலையில் பாடசாலையினால் அம் மாணவிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் கிளிநொச்சி பளை பகுதியிலுள்ள பாடசாலையில் சில வாரங்களின் முன்னர் இடம் பெற்றுள்ளது.

15 வயதான மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆண் நண்பர்களின் பெயரை பொறித்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 5 மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் தொடையில் பெயர்கள் ஏதும் பொறிக்கப்படவில்லை ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பொறித்திருந்ததோடு அது பெயர்களின் சுருக்கமா என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெருப்பில் சூடு வைத்து அந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து மாணவிகள் எச்சரிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
Previous Post Next Post